பைஷல் இஸ்மாயில்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 14 ஆம் பிரிவு கிளைக்குழு அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (09) மாலை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரு கட்சியின் உச்சபீட உறுப்பினராகிய ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது நிருவாக சபை தெரிவும் இடம்பெற்றதுடன் அட்டாளைச்சேனை 14 ஆம் பிரிவு கிளைக்குழுத் தலைவராக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.கலீல் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் எம்.ஏ.அபாஜூல்பான் செயலாளராகவும், யூ.எம்.ஹூசைன் பொருளாளராகவும், உப தலைவராக எம்.ஏ.சீ.றக்கீப், உப செயலாளராக எ.றிஸ்வி மௌலவி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பலர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஏ.அபாஜூல்பானிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச மு.காவின் அமைப்பாளராகிய ஏ.எல்.எம்.நஸீர் குறித்த பிரிவுக்குரிய ஆவணங்களையும் இதன்போது கையளித்து வைத்தார்.
இந்நிகழ்வுக்கு உயர் பீட உறுப்பினர் ஐ.எம்.வாஹீட், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எல்.முனாஸ், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.எம்.காதர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment