வாழைச்சேனையில் கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

த.நவோஜ்-
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் பரிகாரியார் வீதியில் வசித்த வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் முத்துலிங்கம் (வயது – 42) என்பவரே உயிர் இழந்தவர் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாக கிணறு தோண்டுவதற்கு நின்ற அதே வீதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை விஜயகுமார் (வயது – 32) என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மரணித்தவரின் வீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றில் இருந்து மண்னை அகற்றிக் கொண்டு இருக்கும் போது மண் சரிந்து கிணற்று மடுவுக்குள் இருவரையும் மூடிய வேலை பொது மக்களின் உதவியுடன் கணபதிபிள்ளை விஜயகுமார் காப்பாற்றப்பட்ட போதும் வேலாயுதம் முத்துலிங்கம் என்பவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :