மூன்று பிரதான எதிர்க்கட்சிகளின் ஒருவராகவே பொதுவேட்பாளர்:தனித்து போட்­டி­யி­டவும் தயார் - பொன்­சேகா

திர்க்­கட்­சிகள் அனை த்­தையும் ஒன்­றி­னைத்து, பொது எதி­ரணி என்ற கோட்­பாட்­டினை உரு­வாக்­கி­யவன் நானே. இம்­முறை அர­சாங்­கத்­திற்கு எதி­ரான பொது எதி­ர­ணி­யினை உரு­வாக்­கு­வ­தென்றால் அதனை பலப்­ப­டுத்­து­வதில் இணங்க முடியும். எனினும் பொது வேட்­பாளர் பிர­தான மூன்று எதிர்க்­கட்­சி­களின் ஒரு­வ­ராக இருக்க வேண்டும் என தெரி­வித்த ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் சரத்­பொன்­சேகா பொதுக்­கொள்­கையில் இணங்

கா­விடின் தேர்­தலை புறக்­க­ணிக்­கவும் அல்­லது தனித்துப் போட்­டி­யி­டவும் திட்­ட­முள்­ளது எனவும் எச்­ச­ரித்­துள்ளார். ஜன­நா­யகக் கட்­சி­யி­னரால் நேற்று கோட்­டையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

அர­சாங்­கத்தின் சுய நல ஆட்­சி­யினை கட்­டுப்­ப­டுத்­தவும் நாட்டில் ஜன­நா­ய­கத்­தினை ஏட்­ப­டுத்­தவும் நல்ல சந்­தர்ப்­ப­மொன்று ஏற்­பட்­டுள்­ளது.

எனினும் அதனை ஒரு கோட்­பாட்டின் கீழ் அனை­வரும் ஒன்­றி­ணைந்து பெற வேண்டும். அதேபோல் இந்த நாட்டில் தற்­போது நிலவும் அர­சியல் கலா­சா­ரத்­தினை மாற்­றி­ய­மைக்க வேண்டும். அதற்­கா­கவே சகல எதிர்க்­கட்­சி­களும் முயற்­சிக்­கின்­றன. கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது நாம் ஒன்­றி­ணைந்து இம்­மு­யற்­சி­யினை மேற்­கொண்­டி­ருந்தோம். நாட்டில் உள்ள சகல எதிர் கட்­சி­க­ளையும் ஒரே மேடையில் ஒரு கொள்­கையின் கீழ் இணைத்து பய­ணித்த பெருமை என்­னையே சாரும். அதே கோட்­பாட்­டினை இப்­போதும் கடைப்­பி­டிக்க அனை­வரும் தயா­ரெனின் அதனை செயற்­ப­டுத்திப் பார்க்க முடியும். எனினும் நாம் மூன்று கொள்­கை­களை கடைப்­பி­டிக்க சிந்­திக்­கின்றோம்.

ஜன­நா­யக கட்­சி­யினை பலப்­ப­டுத்­தவும் கட்­சியின் உறுப்­பி­னர்­களை பலப்­ப­டுத்­தவும் எனக்கு தேவை­யுள்­ளது. மக்­களின் ஆத­ர­வினை பெற்ற கட்­சி­யாக எம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­ளவும் எமக்­கான கொள்­கை­யினை உறு­திப்­ப­டுத்­தவும் நாம் ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் தனித்து போட்­டி­யி­டு­வதே சிறந்­தாகும். அதேபோல் பொது எதி­ர­ணியில் எமது தனிப்­பட்ட கொள்ளை களுக்கு முன்­னு­ரிமை இல்­லா­வி­டினும் அது எமது கட்­சி­யி­னையே பாதித்­து­விடும்.

எனவே, அவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் நாம் தனித்து செயற்­ப­டு­வது நல்ல முடி­வாக அமையும்.

அதேபோல் நாட்டில் சுயா­தீ­ன­மான தேர்தல் இடம்­பெ­று­வ­தில்லை. கடந்த ஊவா மாகா­ண­ச­பைத்­தேர்தல் இதற்கு நல்­ல­தொரு உதா­ர­ண­மாகும். அத்­தோடு ஜனா­தி­பதி தேர்­தலில் மகிந்த ராஜ­பக்ஷ என்ற தனி மனி­தனின் விரும்­பத்­திற்­காக அர­சியல் யாப்­பி­னையே மாற்­றப்­பார்க்­கின்­றனர். நாட்டில் அர­சியல் யாப்­பினை மீறியும். சட்­ட­திட்­டங்­களை மீறியும் ஒருவர் செயற்­ப­டு­வது அவரை தேசத்­து­ரோ­கி­யாக இனம் காட்டும் எனவும் இன்று நாட்டின் தேசத்­து­ரோகி என்ற பட்­டி­யிலில் முத­லி­டத்தில் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவே உள்ளார். ஆகவே, ஜன­நா­ய­கத்­தினை மீறி நடாத்தும் இத்­தேர்­தலில் போட்­டி­யி­டாது தேர்­தலை புறக்­க­ணிப்­பது மேலா­னது. ஆகவே, அவ்­வா­றா­ன­தொரு முடி­வினை எடுப்­ப­திலும் நாம் தயங்­க­வில்லை

எனினும் இன்று சகல எதிர்க்­கட்­சி­களும் இந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. சுய­நல குடும்ப அர­சி­ய­லுக்­காக நாட்­டியும் மக்­க­ளையும் சுறை­யடும் இந்த அர­சாங்­கத்தை விரட்­டி­ய­டிக்க நாம் சில தியா­கங்­க­ளையும் செய்ய வேண்டும். 

எனவே, அவ்­வா­றான பொது­வா­ன­தொரு எண்­ணத்­திற்­காக நாம் அனைத்து கட்­சி­க­ளு­டனும் இணைந்து பொது எதி­ர­ணி­யினை பலப்­ப­டுத்­து­வது குறித்தும் சிந்­திக்­கின்றோம். அதேபோல் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஜக்­கிய தேசி­யக்­கட்­சியும் எமது உத­வி­களை கோர­வுள்­ளது. எனவே, பொது எதி­ர­ணி­யினை பலப்­ப­டுத்த முடியும். ஆனால், பொது வேட்­பாளர் பக்­கச்­சார்­பில்­லாத சுயநலமாக தனது கட்சியினைப் பலப்படுத்தக்கூடிய வகையில் அமையாது பொது எதிரணியின் கொள்கையினை பலப்படுத்துபவராக இருக்கவேண்டும். 

அதுமட்டுமன்றி பொது வேட்பாளர் பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக்க கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் ஒருவராகவே இருக்க வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாம் பொது எதிரணியினை ஆதரித்து செயற்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

<வீரகேசரி>

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :