ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு மக்கள் கருத்­துக்­களைப் பெற­வுள்­ளது- சம்­பந்தன்

னா­தி­பதித் தேர்தல் உத்­தி­யோக பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டாத நிலையில் அது தொடர்­பாக எவ்­வி­த­மான முடி­வு­களும் இது­வ­ரையில் மேற்­கொள்­ள­வில்லை என தெரி­வித்­துள்ள தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உரிய காலத்தில் மக்கள் கருத்­துக்­களைப் பெற்று உத்­தி­யோ­கபூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் விரை­வி­லேயே ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக நம்­பிக்கை வெளியிட்­டுள்­ளது.

அடுத்த வருட முற்­ப­கு­தியில் ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ள­தாக அர­சாங்­கத்தின் நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்கள் தகவல் வெளியிட்­டுள்­ளன. இந்­நி­லையில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக் ஷ மூன்­றா­வது தட­வை­யா­கவும் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்ளார். மறு­பு­றத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மூன்­றா­வது தட­வை­யாக தேர்­தலில் போட்­டி­யி­டு­வது அர­சியல் சாசனத்­திற்கு முர­ணா­னது எனவும் அதற்­கான ஆலோ­ச­னையை நீதி­மன்­றிடம் பெற­மு­டி­யாது எனவும் குறிப்­பிட்­டுள்ள முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என்.சில்வா 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வதால் நாட்டில் சர்­வா­தி­கார ஆட்­சியே ஏற்­படும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை எதிர்க்­கட்­சி­களின் சார்பில் பொது­வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க போட்­டி­யி­டப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ள­தோடு ஏனைய கட்­சி­களை பொது அணியில் ஒன்­றி­ணைக்கும் முனைப்­புக்­களும் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக நியா­ய­மான சமூ­கத்­திற்­கான தேசிய அமைப்பின் தலைவர் மாது­லுவாவே சோபித தேரர் ரணில் விக்­கி­ர­மசிங்க பொது­வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வது தொடர்பில் ஆட்­சே­பனை இல்­லை­யென தெரி­வித்­துள்ளார். அதே­நேரம் ஜன­நா­யக மக்கள் முன்னணி கட்­சியின் தலைவர் மனோ­ க­ணேசன் மற்றும் ஜன­நா­யக்­கட்­சியின் தலைவர் சரத்­பொன்­சேகா ஆகி­யோரும் பிரத்­தி­யேக சந்­திப்­பொன்றை நடத்­தி­யுள்­ளனர். மேலும் மக்கள் விடு­தலை முன்­னணி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ளரே தவிர பொது­வேட்­பாளர் அல்ல எனக் குறிப்­பிட்­டுள்­ளது.

ஆளும், எதிர்த்­த­ரப்­புக்­களின் இவ்­வா­றான நிலைப்­பா­டு­க­ளுக்கும் நகர்­வு­க­ளுக்கும் மத்­தி­யி­லேயே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது. குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

ஜன­ாதி­பதி தேர்தல் குறித்து உத்­தி­யோக அறி­விப்பு இன்­னமும் வெளியி­டப்­ப­ட­வில்லை. அவ்­வா­றி­ருக்­கையில் நாம் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக இது­வ­ரையில் எவ்­வி­த­மான முடி­வு­க­ளையும் எடுக்­க­வில்லை. எனினும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் நாம் பொது­மக்­களின் கருத்­துக்­களை பெற­வுள்ளோம். அத்­தோடு ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக உத்­தி­யோக­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை விரைவில் ஆரம்­பிக்­க­வுள்ளோம். இதற்­காக கூட்­ட­மைப்பு விசேட கலந்­து­ரை­யா­ட­லையும் மேற்கொள்ளும்.

எவ்வாறாயினும் எமது இறுதி முடிவு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என்ப துடன் தமிழ் மக்களின் நலன்களையும் எதிர்

காலத்தையும் பாதிக்காதவாறு அது அமைந் திருக்கும். குறிப்பாக தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் காணப்படும் தற்போதைய நிலைமைகள், இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு தொடர்பில் அதிகூடிய கவனத் தையும் கருத்திற்கொண்டதாக எமது இறுதி முடிவு அமையும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :