பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கி செல்லவுள்ளார்.
பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க, மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
பிரதமர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் எதிர்வரும் 15ஆம் திகதி கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இரு நாட்டுக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதன்போது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவு பெற்றுகொள்ளவுள்ளமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பிரதிநிதிகள் குழு இந்தியா அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளன.
இரு நாட்டுக்கு இடையில் கையொப்பமிட தீர்மானித்துள்ள சீபா ஒப்பந்தம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என இன்று வெளியாகியுள்ள பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.