வரி சுமையை தாங்க முடியாமல் தனக்குத் தானே தீ மூட்டிய இளைஞ்சனால் பரபரப்பு..!

பாகிஸ்தானில் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு பாதையில் ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் முல்தான் நகரைச் சேர்ந்த 24 வயதடைய ஷஹ்பாஸ் அஹ்மட் என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பாதையில் ஓடியுள்ளார். 

பாகிஸ்தான் அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரிகளினால் அதனைக் கட்ட முடியாமல் கஷ்டப்படுவதனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அவர் இந்த விபரீத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

கடும் எரிகாயங்களுக்குள்ளாகி உடலில் 80 சதவீதமான பகுதி எரிந்துள்ளதனால் அவரின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

அவ்வழியாகச் சென்றவர்கள் உடலில் தீமுட்டிக்கொண்டு பாதையில் ஓடிய அவரை கண்டு உடலில் பரவிய தீயை மண்ணைத் தூவி அணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -