பெப்ரல் அமைப்பு சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கை..!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை பகிரங்கப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டத்திற்கு 56 லட்சம் ரூபா செலவிடப்படுகிறது.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பதால், அமர்வுகளில் கலந்துகொள்ளும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அமைப்பு யோசனை முன்வைத்துள்ளது.

இதனடிப்படையில், ஒரு மாதத்தில், மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில் மற்றும் ஒரு வருடத்தில் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பகிரப்படுத்துமாறும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

இந்த யோசனை செயற்படுத்தப்பட்டால், மக்கள் தாம் தெரிவு செய்த பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினையில் எந்தளவிற்கு தலையிடுகின்றனர் என்பதை மக்களால் கண்டறிய முடியும் எனவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -