வெள்ளவத்தை காலி வீதியில் தீ..!

வெள்ளவத்தை காலி வீதியில், விவேகானந்தா வீதிக்கும் 42ஆம் ஒழுங்கைக்குமிடையில் காணப்படும் இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

காலை 10 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீயானது, தீயணைப்புப் படை வீரர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர், முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

விபத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தீயணைப்புப் படை வீரர்கள், விபத்துக்கான காரணத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், மின்னொழுக்குக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்ததோடு, கவனயீனம் காரணமாகவே தீ அதிகமாகப் பரவியதாகவும் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -