ஜனகவிற்கு எதிராக கொலை குற்றச்சாட்டு..!

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு எதிராக, மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் ஜனக பண்டாரவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

சட்ட மா அதிபர் யுவான்ஜித் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.

2000ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்லேபொல தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, என்னை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சமிந்த டயஸ் மற்றும் லக்ஸ்மன் துல்வல ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.

நீதிமன்ற நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை.

மீளவும் விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாக ரஞ்சித் அலுவிோரே சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -