இக்பால் அலியார்-
துருக்கி நாட்டு பிரதமர் அலுவலகத்தின் கலாசார விவகார தலைமை அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் உலக நாடுகளின் முஸ்லிம் தலைவர்களுக்கான மாநாடு 13 ஆம் திகதி முதல் 16 வரை துருக்கி இஸ்தாம்பூல் நகரில் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து விஜயம் செய்து முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் மற்றும் மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சின் இஸ்லாமிய விவகார அரச ஆலோசகர் செர் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் செயின் ஆகிய இருவர்களுக்கிடைலான நல்லெண்ணச் சந்திப்பு நடைபெற்றது.