பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் ரணில் - அல்-இஹ்ஸான்

பி.எம்.எம்.ஏ.காதர்-
க்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார் இதனால் அவர் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் ஆசிரியர் அல்இஹ்ஸான் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய குழுவின் விஷேட கூட்டம் திங்கள் இரவு (12-10-2015) மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இதில் தலைமை உரையாற்றிய போதே ஆசிரியர் அல்-இஹ்ஸான் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்த்தர்களான எஸ்.எச்.பர்ஸாத் கான், சட்டத்தரணி அப்துல் றஸாக், எம்.எல்.எம்.ஜமால் தீன் ஆகியோருடன் பெரும் தொகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த விஷேட கூட்டத்தில் அல்-இஹ்ஸான் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- 

கடந்த கால ஆட்சியில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர். 

அபிவிருத்தியிலும் தொழில் வழங்குவதிலும்,ஏனைய விடயங்களிலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது இதனால் எமது ஆதரவாளர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -