அஜீத் தனது கையால் சமைத்த பிரியாணியை சாப்பிட மறுத்த ஸ்ருதி - காரணம் இதோ

விஜய், அஜீத் படப்பிடிப்பு இறுதி நாளின் போது படத்தில் பணியாற்றியவர்களுக்கு பிரியாணி விருந்து அளிப்பதுண்டு. குறிப்பாக அஜீத் தனது கையாலேயே பிரியாணி சமைத்து வழங்குவார். 

‘வேதாளம்’ படப்பிடிப்பு இறுதி நாளின்போது பிரியாணி தயார் செய்தார் அஜீத். ஜோடியாக நடித்த ஸ்ருதி ஹாசனை பிரியாணி சாப்பிட அழைத்தபோது மறுத்துவிட்டார். 

ஸ்ருதி சைவ உணவு சாப்பிடும் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அசைவம் சாப்பிடுவார். அவரது தந்தை கமலும் அசைவ பிரியர்தான். 

பிரியாணி சாப்பிட மறுத்ததுபற்றி அஜீத்திடம் கூறிய ஸ்ருதி, ‘அசைவம் சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு. ஆனால் இப்போது கடுமையான உணவு கட்டுப்பாடு மேற்கொண்டிருக்கிறேன். அதனால் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டேன்’ என்றார். அஜீத்தும் அதை ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு பரிமாற தொடங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -