கல்முனையில் 33வயது மதிக்கத்தக்க பெண் பட்டப்பகலில் வெட்டிக்கொலை..!

சம்சுதீன்,நளீர்-
ல்முனை சர்வோதய காரியாலத்தின் உள்ளே இன்று பகல் 2 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் 33வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட சடலம் தொடர்பாக கல்முனைப் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது கிடைத்த செய்தி:-
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ராஜேந்ரன் சுலக்‌ஷனா 30 வயது 2 பிள்ளைகளின் தாய் என அடையாளம் கானப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டுள்ளனர்.


இது குறித்து ‘எமது செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர் தெரிவிக்கையில்;

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

கல்முனை, பிரதான வீதியில் உள்ள சர்வோதய பினான்ஸ் வங்கி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் முகாமையாளர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர் இப்பெண்ணை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -