நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக தேங்காய் உடைக்க சீனிகம ஆலயத்திற்கு சென்றிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பணப்பை திருட்டு போயுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பணப்பை மாத்திரமல்லாது ஊடகவியலாளர் உட்பட சிலரது பணப் பைகளும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் ஆலயத்தில் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து தினேஷ் குணவர்தன உட்பட மேலும் இருவரது பணப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தினேஷ் குணவர்தனவின் பணப்பை காணாமல் போயுள்ளதாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்ததை அடுத்து அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் பணப்பை மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் குணவர்தன எவ்வளவு பணம் வைத்திருந்தார் என்பது தெரியவரவில்லை.
சீனிகம ஆலயத்திற்கு தேங்காய் உடைப்பதற்காக சுமார் 1100 பேர் சென்றிருந்ததாக புலனாய்வு தரப்பினர் கூறுகின்றனர்.