நான் சிறைக்குச் சென்று வந்ததை ஒரு படிப்பினையாகக் கொண்டு, அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்புவேன் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரதீப் எக்னிலிகொடவின் மனைவி சந்தியா எக்னிலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலையான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்திடன் புதிய கோரிக்கை ஒன்றையும் அவர் முன்வைத்துள்ளார்.
‘பௌத்தர்களின் தலைவர்களாக செயற்படும் ஒவ்வொரு தலைவர்களிடமும் நான் ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கின்றேன்.
பிக்குகள் தெளிவை பெற்றுகொள்வதற்காக, பாடசாலை கல்வித் திட்டத்தில் அல்லது பல்கலைக்கழக கல்வித் திட்டத்திலாவது இந்நாட்டின் தற்போது நடைமுறையில் உள்ள நீதி தொடர்பில் விடயதானங்கள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.