அமைச்சர் ராஜித பூரண சுகமடையவேண்டி கல்முனையில் சிறப்புப்பூஜை, பிரார்த்தனை..!

காரைதீவு நிருபர் சகா-
சுகாதாரஅமைச்சர் ராஜிதசேனாரத்ன பூரணசுகமடைய வேண்டி கல்முனை ஆதாரவைத்தியசாலையிலுள்ள சித்திவிநாயகர் ஆலயத்தில் நேற்று விசேடபூஜையும் பிரார்த்தனையும் நடைபெற்றது.

வைத்தியசாலை நிருவாகமும் அபிவிருத்திக்குழுவும் இணைந்து நடாத்திய இவ்விசேட பூஜையும் பிரார்த்தனையும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நிரோசன் ஜயா தலைமையில் நடைபெற்றது. நேற்றைய தினம் அமைச்சர் ராஜிதவிற்கு சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் சத்திரசிகிச்சை நடைபெற்றது. அவ்வமயம் இச்சிறப்புப்பூஜை இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சிக்கு வழிகோலிய முக்கிய தலைவர்களுள் ஒருவராகிய அமைச்சர் ராஜித இன மத பேதம் பாராது சேவையாற்றிவருபவர். வைத்தியசாலை ஊழியர்களும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரும் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -