இலங்கைக்கு வந்துள்ள இந்திய நாட்டின் வெளிவிகார அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் அவர்களுக்கும் வட, கிழக்கு அரசியல் பிரமுவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச் சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றதுடன் வடக்கு , கிழக்கு வாழ் மக்களின் பல பிரச்சினை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் .தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பைசல் காசிம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசனலி , பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர் , கிழக்கு முதலமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான ஹாபீஸ் நசீர் ஆகியோர் பங்கேற்றிருந்த அதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா உட்பட இன்னும் பலர் பங்கேற்று இருந்தனர்.