க.கிஷாந்தன்-
காலஞ்சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13
ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.
காலஞ்சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய
கலகமஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் பூதவுடல் 10.03.2016
அன்று காலை அஸ்கிரி விகாரைக்கு எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில் அவரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கீழே விழுந்த நிலையில் சுயநினைவை இழந்த கலகமரீ அத்ததஸ்ஸி தேரர், 09.03.2016 அன்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், 09.03.2016 அன்று மாலை அவர் இறைபாதம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.