அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன








க.கிஷாந்தன்-

காலஞ்சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13
ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. 

காலஞ்சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய 
கலகமஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் பூதவுடல் 10.03.2016 
அன்று காலை அஸ்கிரி விகாரைக்கு எடுத்து வரப்பட்டது. 

இந்நிலையில் அவரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

கீழே விழுந்த நிலையில் சுயநினைவை இழந்த கலகமரீ அத்ததஸ்ஸி தேரர், 09.03.2016 அன்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர், 09.03.2016 அன்று மாலை அவர் இறைபாதம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -