தொடர் முயற்சியால் இராணுவத்திடமிருந்து 175 ஏக்கர் காணிகளைப் பெற்ற சம்பூர் மக்கள் -படங்கள்

அபு அஹ்னப்-

திருகோணமலை மாவட்டம் சம்பூர் கிராமம் கடந்தகால யுத்தத்தின் போது இராணுவத்தினரால் பொது மக்களின் இடங்கள் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் குடிபெயர்தனர்.

ஆனால் யுத்தம் முடிந்ததன் பிற்பாடு தமிழ் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அங்கு அம்மக்களின் காணிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீளளிக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று 25.03.2016 காலைமீதமாக இருந்த 175 ஏக்கர் காணிகள் அம்மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சம்பூர் கடற்படை முகாமில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் சந்தோஷத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தலைமையில் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கிழக்கின் ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், காணி அமைச்சர் ஆரியபதி கலபதி ஆகியோருடன் அரச அதிகாரிகள் படைத் தளபதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -