குடாகம கொமர்ஷல் பகுதியில் தீ - 20 ஏக்கர் எரிந்து நாசம்

க.கிஷாந்தன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம கொமர்ஷல் பகுதியில் உள்ள 50 ஏக்கர் கொண்ட காடு 25.03.2016 அன்று தீடிரென தீபற்றியதால் சுமார் 20 ஏக்கர் காடு தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இச்சம்பவம் 25.03.2016 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்படுத்த திம்புள்ள – பத்தனை பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. 

கொட்டகலை பெற்றோலிய கூட்டுத்தாபன தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள – பத்தனை பொலிஸார் மற்றும் அட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவு ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்படுத்த பிற்பகல் 2 மணிவரை முயற்சித்தனர். 

ஆனால் சில பகுதிகளில் மட்டுமே அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. 

எனினும் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 20 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடதக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -