காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் 24வது மாபெரும் விழா - 2016

ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவில் அல்குர்ஆன் கற்று வெளியாகும் மாணவர்களின் 24 வது வருட மாபெரும் விழா இன்ஷா அல்லாஹ் 25.03.2016 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் M.S.M.அஸார் மெளலவி தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ் விழாவில் 2015 ம் வருடம் அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த 59 மாணவர்களை கெளரவிப்பதோடு இம் மத்ரஸாவில் அல்குர்ஆன் கற்று வெளியேரி உயர்நிலையில் உள்ள மாணவர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்.

அத்துடன் சமூகத்திற்கு பல சேவைகள் செய்த மூத்தவர்களுக்கான அதி உயர் கெளரவ விருதும் வழங்கப்படவுள்ளது..

விழாவில் மத்ரஸா மாணவர்களின் நிகழ்வுகளும், பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறார்கள்.
அதிபர், 
நிர்வாகம், 
மாணவர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -