பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 67வது பிறந்தநாள் நிகழ்வு - படங்கள் இணைப்பு

ன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 67வது பிறந்தநாள் நிகழ்வு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அமைச்சர்கள் கட்சி உறுப்பினர்கள் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1949ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி பிறந்த ரணில் விக்ரமசின்ஹ இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒருவராவார்.

தற்போதைய அரசியல்வாதியும், பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான இவர் கடந்த 2015 ஜனவரி 9ம் திகதி முதல் பிரதமராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994 முதலும், 1977 முதல் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய அரசியல் கூட்டணிகளின் தலைவராகவும் உள்ளார்.

ரணில் விக்ரமசின்ஹ 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 முதல் 2004 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். 1994 இல் காமினி திசாநாயக்கா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் பாராளு மன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவை இலங்கையின் பிரதமராக நியமித்தார்.

இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ரணில் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஆனாலும், அது அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது. ரணில் விக்கிரமசிங்ஹ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் செய்துகொண்ட இரண்டாண்டு உடன்படிக்கையை அடுத்து ரணில் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வவுனியாவில் கைச்சார்த்திடுவதில் ரணில் முக்கிய பங்காற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -