கழுகு ஒன்றை உயிருடன் துன்புறுத்தி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதிமன்ற மேலதிக நீதவான் கேசர சமரதிவாகர உத்தரவிட்டுள்ளார்
காலி ஹபராதுவ – பம்பகல பாலத்துக்கு அருகில் சிலரினால் கழுகு ஒன்றை சித்திரவதை செய்து கொலை செய்வது போன்ற புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைத் தலங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று இரவு குறித்த இரு சந்தேகநபர்களையும் ஹபராதுவ பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.