கழுகை உயிருடன் துன்புறுத்தி கொலை செய்த சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்..!

ழுகு ஒன்றை உயிருடன் துன்புறுத்தி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதிமன்ற மேலதிக நீதவான் கேசர சமரதிவாகர உத்தரவிட்டுள்ளார்

காலி ஹபராதுவ – பம்பகல பாலத்துக்கு அருகில் சிலரினால் கழுகு ஒன்றை சித்திரவதை செய்து கொலை செய்வது போன்ற புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைத் தலங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று இரவு குறித்த இரு சந்தேகநபர்களையும் ஹபராதுவ பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -