இறுதி யுத்தம் மற்றும், யுத்த வெற்றி குறித்து முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய போது, சபையில் பிரசன்னமாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபையில் இருந்து நழுவியுள்ளார்.
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகின. இதன்போது, இன்று நண்பகல் 1 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு பிரசன்னமாகியிருந்தார்.
இதன்போது, அடுத்த உரையாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்காவின் உரை இடம்பெறவிருப்பதை அறிந்த அவர் வந்த வேகத்திலேயே சபையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் தமது உரையினை நிகழ்த்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மஹிந்த தனது உரையை நாடாளுமன்றில் மறைந்திருந்து செவிமடுப்பதாகவும் கூறினார்.