சரத் பொன்சேகா பொய் சொல்கின்றார் - பஷில் ராஜபக்‌ஷ

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் கொடுத்ததாக தான், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கூறவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். எனினும் பொன்சேகாவின் குற்றச்சாட்டை பசில் ராஜபக்ச, அரசியல் வேட்டை என வர்ணித்துள்ளார்.

பொன்சேகா கூறியது, முற்றிலும் பொய்யானது, அப்படியான சம்பவம் நடைபெறவில்லை. பொன்சேகாவுடன் நான் அப்படியான எதனையும் பேசவில்லை.

இது அவரது கருத்துக்கு அமைய கூறிய விடயமல்ல. ஒரு நீண்டகால இலக்கு ஒன்றை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் வேட்டையாடல் நடவடிக்கை என்று எமது சட்டத்தரணிகள் கருதுகின்றனர் என பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

அதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான வங்கிகள் மற்றும் வேறு விதமாக கைப்பற்றிய தங்கத்தை மீண்டும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கிய போதிலும் அதில் ஒரு பகுதி காணாமல் போயுள்ளதாக அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பசில் ராஜபக்ச, தங்கத்தை மீண்டும் மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், அது பற்றிய மேலதிக தகவல்கள் தனக்கு தெரியாது என்றார்.

இதேவேளை, ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில், கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில், பொன்சேகாவின் குற்றச்சாட்டை மறுக்கின்றேன். கைப்பற்றிய தங்கத்தை மீண்டும் கையளித்தமை சம்பந்தமான சட்டரீதியான பின்னணி எனக்கு தெரியாது என்றார்.

தங்கத்தை மீண்டும் வழங்கியமை தொடர்பில் தேவையெனில் விசாரணைகளை நடத்துவதில் எவ்வித தவறையும் தான் காணவில்லை எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -