யூகங்களால் மட்டிட கூடிய தலைமையல்ல அதாஉல்லா - அஸ்மி ஏ கபூர்

ண்மையில் முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் தவிசாளருடனான அதன் தலைவரினுடான மோதுகை தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை சம்பந்தப்படுத்தி கருத்து வெளியிட்டிருப்பது தொடர்பில் ஊடகங்களின் யூகங்களுக்கு அப்பாற்பட்டவர் அதாஉல்லா என்பதை மிகதெளிவாக கூறுகிறோம்.

உட்கட்சி முரண்பாடு தொடர்பில் அந்த அந்த கட்சிகளே கருத்தில் கொள்ளவேண்டும். இன்னொரு கட்சி தொடர்பில் வீணாக திரிபுபடுத்த முனைவது அரசியலில் தூர நோக்கற்ற தன்மை ஆகும்.

வரலாற்றில் முஸ்லீம் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவுகளில் சமுகத்தின் நலனுக்காகவும் வடகிழக்கு முஸ்லீம்களின் இனத்துவ அடையாளத்தையும் உறுதிப்படுத்த அதாஉல்லாவால் ஏற்படுத்தப்பட்ட புரட்சி ஆகும்.

அந்த முயற்சியை முன்னின்று பின்னடைய செய்தவர்களுக்கு இன்று காலம் கடந்த ஞானமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

காலத்துக்கு காலம் முஸ்லீம் காங்கிரஸின் தலைமைகளின் சாணக்கியத்தால் பிளவு சர்வ சாதாரணமான விடயமாகும்.

அதாஉல்லாவும் அறிவுரை வழங்குகிறார் என போராளிகளுக்கு கூறி தவிசாளர், செயலாளர் போன்றோரின் நியாயங்களை மழுங்கடிக்க மேற் கொள்ளும் ஊடக அரசியலாகும்.

கட்சிகளுக்குள் இடம் பெறும் உட் கட்சி பூசலை தீர்த்துக் கொள்ள வேண்டும் வீணாண யூகங்களால் பலன் ஏதும் ஏற்படப் போவதில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -