மு.கா இளைஞர் ஒன்றுகூடலில் பிரதித் தலைவர் ஹரீஸை பாராட்டிய அமைச்சர் ஹக்கீம்..!

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை முன்னிட்டு இளைஞர் தொண்டர்அணிக்கான ஒன்றுகூடல் நேற்று (12) சனிக்கிழமை பாலமுனையில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.

கட்சியின் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலில் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சிலின் நெறிப்படுத்தலில் நடைபெற்றஇவ்வொன்றுகூடல் நிகழ்வில் இளைஞர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன்ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் சகல பிரதேச இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் மாவட்ட இளைஞர் தொண்டர்அணி அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய புத்தகத்தை தலைவரிடம் கையளித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம்,

கட்சியின் தேசிய மாநாட்டை முன்னிட்டு இளைஞர் ஒன்றுகூடல் மூலம் மாநாட்டுவிடயங்கள் மாவட்டத்தின் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம்இளைஞர்கள் ஊடாக ஏற்பட்டுள்ளது. அத்தோடு இவ் இளைஞர்களுடன் கட்சியின் மக்கள்பிரதிநிதிகளை ஒன்றிணைத்து ஒரு சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியையும்நடாத்துவதற்கு கட்சியின் பிரதித் தலைவர் பிரதி அமைச்சர் ஹரீஸ் வழங்கிய யோசனையைவரவேற்கின்றேன். பாராட்டுகின்றேன்.

இவ் ஆலோசனையை கட்சியின் ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் ஏற்று இவ்வாறானபிரமாண்டமான நிகழ்வினை விரைவாக ஏற்பாடு செய்த முன்னாள் தவிசாளர் அன்சில்உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறான இளைஞர் தொண்டர் அணியினை ஏனைய மாவட்டங்களிலும் அமைத்துகட்சியின் செயற்பாடுகளுடன் இளைஞர்களை இணைப்பதற்கு கட்சியின் தலைமைஇன்றிலிருந்து முடிவு செய்துள்ளது என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -