விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் புலி. இப்படத்தை விஜய்யின் உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரித்திருந்தார். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் விஜய்யின் தெறியை கலைப்புலி தாணுதயாரித்துள்ளது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக செல்வகுமார் ஒரு சிலருடன் உண்ணாவிரதம் இருந்தார்.
இதை தொடர்ந்து வருகிற 27ம் தேதி கூடுகின்ற தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில், உண்ணாவிரதம் இருந்தவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமாம். மேலும், செல்வகுமார் கஷ்டத்தில் இருந்த போது பல உதவிகளை நான் செய்துள்ளேன் என தாணு கூறியது குறிப்பிடத்தக்கது.