யாழ் காக்கைதீவு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு மீட்பு..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் அராலி காக்கைதீவு ஆணைக்கோட்டை பகுதியை இணைக்கும் உள்வீதி மருங்கில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று(8) மாலை அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து அவ்விடத்திற்கு வந்த மானிப்பாய் பொலிஸார் இன்று குண்டு காணப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

குறித்த குண்டு இராணுவத்தினர் பாவிக்கும் வர்க்கத்தை உடையது எனவும் கடந்த காலங்களில் இப்பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் கைவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதே வேளை இக்குண்டு செயலிழக்கப்பட நீதவானின் கவனத்திற்கு தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை செயலிழப்பதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் பண்ணைப் பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் வந்து குண்டினை செயலிழக்கச் செய்வார்கள் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -