காலியில் பொலிஸாருக்கும் பிரதேச இளைஞர்களுக்கும் இடையில் மோதல்

காலி, தடல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பிரதேச இளைஞர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  திருமண நிகழ்வொன்றில் மோதல் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறி இன்று அதிகாலை 3.00 மணியளவில் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. 

அதன்படி காலி பொலிஸ் நிலையத்தின் நான்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

இதன்போது பொலிஸாருக்கும் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் குழுவொன்றுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதலில் காலி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் தலைப் பகுதி தடி ஒன்றினால் தாக்கப்பட்டு காராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் மோதல் சம்பவத்தில் பொலிஸ் ஜீப் வண்டியின் கண்ணாடிகளும் உடைந்துள்ளாதாக எமது செய்தியாளர் கூறினார். 

சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், காலி நீதிமன்றில் அவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -