கட்டுநாயக்காவில் தொடந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..!

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைத்து விமானங்களையும் விமானப்படையின் விசேட அணியினர் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிகை்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

பெல்ஜியம், பிரசல்ஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து உலக நாடுகள் பூராவும் விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதையடுத்து இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களில் வந்த பயணிகள் வெளியேறி சென்ற பின்னர் குறித்த சோதனை நடவடிக்கைகளை விமானப்படையின் விசேட அணியினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -