எம்.ஜே.எம்.சஜீத்-
அல்- இபாதா கலாச்சார மன்றத்தின் ஊடாக எமது பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகளை இப்பிரதேசத்தில் கட்டியெழுப்ப வேண்டும் . இன்றைய நவீன யுகத்தில் இவ்வாறான பாரம்பரிய விடயங்கள் மறைந்தும், மறந்தும் போகின்ற நிலை காணப்படுகிறது அல்- இபாதா கலாச்சார மன்றத்தின் கலாச்சார பிரிவு பூரன ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அல் இபாதா கலாச்சார மன்றத்தின் கலாச்சார குழு பிரிவின் தலைவரும், அதிபருமான எம். ஏ. அன்சார் தெரிவித்தார்.
அல் இபாதா கலாசார மன்றத்தினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெறவுள்ள கலாச்சார மேம்பாட்டுக்கான திட்டமிடல் கூட்டம் அல் அர்ஹம் வித்தியாலயத்தில் நடைபெற்றது இதற்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதில் அல் இபாதா கலாசார மன்றத்தின் கலாச்சார குழு தலைவர் , செயலாளர் , பொருளாலர், உட்பட குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்.