இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை

போதைப் பொருளை கடத்திச் சென்றமை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் இலங்கை பெண்ணொருவருடன் மூன்று இந்திய பிரஜைகளுக் குவைத் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இலங்கை பெண்ணுடன் இணைந்து கேரளாவை சேர்ந்த மூன்று இந்தியர்களும் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர்களில் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு எதிராக போதைப் பொருள் விநியோக குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனினும், மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய இவர்களுக்கு 30 நாள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -