அமைச்சா் ரவூப் ஹக்கீம் இந்தியத் உயா் ஸ்தாணிகா் வை.கே. சிங்கா ஒப்பந்தம் கைச்சாத்து


அஷ்ரப் ஏ சமத்-


ன்று (8) நீர்விநியோக வடிகாலமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சா் ரவுப் ஹக்கீம் மற்றும் இந்தியத் உயா் ஸ்தாணிகா் வை.கே. சிங்கா முன்னிலையில் இந்தியாவின் எக்ஸ்போட் -இம்போட் வங்கி இலங்கையின் மூன்று நீர்விநியோகத்திட்டத்திற்காக 304 மில்லியன் அமேரிக்க டொலா் கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனா்.. இவ் ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸ்போட் - இம்போட் வங்கியின் தலைவா் யவேந்திரா மதுாா். இலங்கை நீர்விநியோக வடிகாலமைப்புச் சபையின் தலைவா் கே.ஏ அண்சாா், உப தலைவா் ரஜப்டீன் ஆகியோறும் கைச்சாத்திட்டார்கள்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா் ரவுப் ஹக்கீம் -

அண்மையில் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தின்போது இக் கடன் திட்டத்தினை குறைந்த வட்டியில் வழங்க பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதன் பயணனாக இத்திட்டம் எமக்கு கிடைக்கப்பெற்றது. . இவ் மூன்று திட்டங்களான குண்டசாலை, ஹரங்கம, 3 இலட்சம் மக்கள் குடி நீர்திட்டத்திற்காக - அமேரிக்க டொலா் 172.13 மில்லியன் , அளுத்கம, மத்துகம, அகலவத்தை 4 இலட்சத்து 50ஆயிரம் மக்கள் குடி நீா்த்திட்டத்திற்காக - - அமேரிக்க டொலா் 194 மிலலியன் மற்றும் அலவுவ, மவாத்தகம, பொத்துகர 108 மில்லியன் - அமேரிக்க டொலா் செலவு செய்யப்பட்டவுள்ளன. இவ் மூன்று திட்டங்கள் நிறைவடைந்ததும் சுமாா் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுத்தமான குடிநீரை பெற உள்ளனா்.

இந்த திட்டத்திற்காக உதவிய திரைசேரி, பிரதம மந்திரியின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம், மற்றும் ரான்பேரண்ஸ் அதிகாரிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் இந்திய வங்கியின் தலைவா் இந்திய பிரதமா் மோடிக்கும் இலங்கை மக்கள் சாா்பாக அமைச்சா் ரவுப் ஹக்கீம் தமது நன்றியைத் தெரிவித்தாா்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -