எப்.முபாரக்-
திருகோணமலை சீனக்குடா பிரதேசத்தில் திருட்டு மின்சாரம் இருவரை நாளை வியாழக்கிழமை (24)ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே இன்று புதன்கிழமை (23)உத்தரவிட்டார்.
சீனக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 60மற்றும் 31வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களுக்கெதிராக திருகோணமலை மின் பிராந்திய அலுவலகத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மின்சார சபை உத்தியோகத்தர்களும் சீனக்குடா பொலிஸாரும் திடீர் சோதனையை மேற்கொண்ட நிலையிலே செவ்வாய்கிழமை (22) மாலையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.