ஊழியர்கள் வைத்தியர்களின் கடைமைகளை செய்யவரக்கூடாது - சுகாதார அமைச்சர் நஸீர்

அபு அலா, ஏ.எல்.எம்.நபார்டீன் –
ழியர்கள் வைத்தியர்களின் கடமைகளைச் செய்யவரக்கூடாது. உழியர்கள் உழியர்களின் கடமைகளை மாத்திரமே செய்யவேண்டும். அவ்வாறு இடம்பெறாது போனால் அதனால் ஏற்படும் விளைவுகளை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கலந்துரையாடல் நேற்று (21) இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்குவதன் பொருட்டு சமூக, பொருளாதார, உளவள, ஆன்மீக மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் அர்ப்பணிப்புடன் சகல வைத்தியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து தங்களுக்னெவென்று பணிக்கப்பட்டுள்ள கடமைகளில் தங்களின் கடமைகளை சரிவரச் செய்வதன் மூலமே ஒரு சிறந்த ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க முடியும்.

அத்துடன் பால்நிலை தொடர்பான வன்முறையினைக் குறைப்பதற்கு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் போன்றவற்றுடன் அது தொடர்பிலான சட்டங்களையும் அடிக்கடி மக்கள் மத்தியில் விளக்கிவருவதனால் எதிர்காலத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைப்பதற்கான செயற்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் எல்லோ உத்தியோகத்தர்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.

அதுமாத்திரமல்லாமல், பாத்திக்கப்பட்ட நபர்களுக்கு அவசர சிகிச்சையளித்தல், உதவிகள், பாதுகாப்பு வழங்கள், சட்ட உதவிகள், உளவள ஆலோசனைகள் வழங்கள் ஆபான்றவற்றுடன் தேவைகளுக்கெற்ப ஏனைய நிறுவனங்களின் ஊடாக கல்வி, பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்ற உதவிகளைப் பெற்றுக்கொடுக்க சகலரும் செயற்பட்டால் மாத்திரமே ஒரு சிறந்த ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க முடியும் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -