எம்.ஐ. சம்சுதீன்-
சாய்ந்தமருது அல்ஜலால் வித்தியாலயத்தின் மாணவத்தலைவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் வைபவம் பாடசாலை காலை ஆராதணை வைபவத்தில் இடம் பெற்றது.
இவ்வைபவம் அண்மையில் கல்லூரி அதிபர் எம்.எம்.நபார் தலமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியூ.கப்பார் கலந்து கொண்டு மாணவத்தலைவி ஒருவருக்கு அடையாள அட்டையை அணிவிப்பதையும் அருகில் பாடசாலை பகுதித் தலைவர் , ஆசிரியர்களையும், பிரதம அதிதியுடன் மாணவத்தலைவர்களும் ,அதிபரும், ஆசிரியர்களும் குழுவாக எடுத்து கொண்ட படத்தையுமே காண்கிறீர்கள்