முஸ்லிம் அமைச்சர்களிடம் சிங்கள அமைச்சர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது சமூகத்துக்காக சேவையாற்றி வருகின்றனர். இவர்களை எமது சிங்கள அமைச்சர்கள் சிங்கள மக்களுக்கு சேவை செய்வதற்கான முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். தான் தமிழ் மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் அல்ல. சிங்கள, முஸ்லிம்களுக்கும் அமைச்சர் ஆவார். எனவே, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களின் குடியேற்றத்திலும் அவர் மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் செயலாற்ற வேண்டும்.
அவர் தமிழ் மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் அல்ல என்பதையும் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தேரர் மேலும் கூறினார்