முஸ்லிம் அமைச்சர்களிடம் சிங்கள அமைச்சர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் - ஞானசார

முஸ்லிம் அமைச்சர்களிடம் சிங்கள அமைச்சர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது சமூகத்துக்காக சேவையாற்றி வருகின்றனர். இவர்களை எமது சிங்கள அமைச்சர்கள் சிங்கள மக்களுக்கு சேவை செய்வதற்கான முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.

மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். தான் தமிழ் மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் அல்ல. சிங்கள, முஸ்லிம்களுக்கும் அமைச்சர் ஆவார். எனவே, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களின் குடியேற்றத்திலும் அவர் மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் செயலாற்ற வேண்டும். 

அவர் தமிழ் மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் அல்ல என்பதையும் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தேரர் மேலும் கூறினார் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -