பாதால உலக உறுப்பினர்களை பிடிக்க சர்வதேச பொலிஸார் உதவி..!

வெளிநாட்டிலிருந்து செயற்படும் இலங்கை பாதால உலக குழுக்களின் முக்கிய உறுப்பினர்கள் 20 பேரை பிடிக்கும் நடவடிக்கைக்கு சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.

இந்த 20 பேர் தொடர்பில இன்ட்ரபோல் பொலிஸார் சிவப்புப் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தக் குழு போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும், இவர்கள் இலங்கைப் பொலிஸாரினால் வேண்டப்படுபவர்கள் எனவும் சர்வதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பாதால உறுப்பினர்களில் திருகோணமலையைச் சேர்ந்த “ஐஸ் மன்ஜு” என்பவரும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் இத்தாலி, பிரான்சு மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -