எஸ்.எம். சன்சீர்-
இறக்காமத்தைச் சேர்ந்த கலந்தர் லெவ்வை முஹம்மட் ஹாசீம் என்பவர் இறக்காமப் பிரதேசத்தின் குவாசி நீதி மன்றத்திற்கான நீதிபதியாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி. நளினி கந்தசாமி முன்நிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
இவர் கடந்த 1964 ஆம் ஆண்டில் ஆசிரியராக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவர் அதிபராகவும், உதவி கல்விப் பணிப்பாளராகவும், கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் பதவி உயர்வு நிலை பெற்று சேவை செய்த இவர் 2002 இல் அரச ஓய்வு நிலை பெற்றதன் பின்னர் 2004ம் ஆண்டுமுதல் இன்று வரை அரச கரும மொழித்திணைக்களத்தினூடாக சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கின்ற பகுதி நேர விரிவுரையாளராகவும் சேவையாற்றி வருகின்றார்.
சமூக சேவைகளில் ஆர்வம் கொண்ட இவர் இறக்காமம் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவராகவும் பிரதேச பிரஜைகள் குழு, சமாதானசபை ஆகிவற்றின் தலைவராகவும் செயற்பட்டதனால் கடந்த 2011ம் ஆண்டில் சாமஶ்ரீ தேசமானி பட்டத்தைப் பெற்ற இவர் தொடர்ந்தும் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவராக செயற்படுகின்றார். மர்ஹூம்களான கலந்தர் லெவ்வை சவ்வூதா உம்மா அவர்களின் கனிஷ்ட புத்திரருமாவார்.