இலங்கை அணிக்கு ஜனாதிபதியின் வாழ்த்து..!

ந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

ஜனாதிபதி இலங்கை கிரிக்கட் அணியினரை நேற்று (8) மாலை கொழும்பு குதிரைப்பந்தையத் திடலில் வைத்து சந்தித்தார். இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களும் உடனிருந்தார்.

‘ஒரே அணி – ஒரே தேசம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை இலங்கைக் கிரிக்கட் அணியினரின் உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்கின்றார்கள். இதைமுன்னிட்டு ‘ஒரே அணி – ஒரே தேசம்’ எனும் வாக்கியம் பொறிக்கப்பட்ட இலட்சினை இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவினால் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.

‘ஒரே அணி – ஒரே தேசம்’ (One Team – One Nation) உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -