எப்.முபாரக்-
திருகோணமலையில் பொது இடத்தில் மதுபானம் அருந்திய இருவருக்கு தலா ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே இன்று வியாழக்கிழமை (10)உத்தரவிட்டார்.
தெவனகால ,அலுத்நுவர, மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த முஹம்மட் இப்ராகிம் வயது(42),மற்றும் காந்திநகர், செட்டிக்குளம் ,வவுனியா பிரதேசத்தைச் ஜெகநாதன் உதயகுமார் வயது(26) ஆகிய இருவருக்குமே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் திருகோணமலை பகுதியில் அங்காடி வியாபாரம் செய்து வந்த நிலையில் நேற்று புதன் கிழமை(9)மாலை வேளையில் திருகோணமலை பகுதியில் சன நெரிசல் மிக்க இடத்தில் சாராயம் குடித்துக் கொண்டு நடமாறித் திரிந்த நிலையில் திருகோணமலை பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (10) ஆஜர்படுத்திய போதே 1500தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாதம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.