இணைவோம் வாருங்கள் - அமைச்சர் றிஷாட் (வீடியோ)

முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்தில் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் புதிய தேர்தல் முறை­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­ப­தற்­காக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கட்சி வேறு­பா­டு­க­ளின்றி ஒன்­றி­ணை­யு­மாறு அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் முஸ்லிம் சமூகம் சமூ­கத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­தது. மஹிந்த ராஜபக் ஷவை தோற்­க­டிப்­ப­தற்கு பங்­காளர்­க­ளாகி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆட்­சி­பீ­ட­மேற்­றி­னார்கள். 

முஸ்லிம் சமூகம் அர­சியல் யாப்பு திருத்தம் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்றோ புதிய தேர்தல் முறை அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்றோ வாக்­க­ளிக்­க­வில்லை. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியே புதிய தேர்தல் முறையில் அதிக அக்­கறை கொண்­டுள்­ளது.

புதிய தேர்தல் முறையின் கீழ் முஸ்­லிம்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் நிச்­சயம் குறை­வ­டையும் அதனால் அகில இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்­லிம்­களின் பாரா­ளு­மன்ற மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற பிர­தி­நித்­துவம் பாது­காக்­கப்­படும் வகை­யி­லான தேர்தல் முறை மாற்­றத்­தையே வலி­யு­றுத்தி நிற்­கி­றது. 

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யு­டனும் பிர­த­ம­ரு­டனும் பல தட­வைகள் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றது. கட்­சியின் நிலைப்­பாட்­டினை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கிறோம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசி­மு­டனும் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். 

புதிய தேர்தல் முறைமை சிறு­கட்­சி­க­ளையும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளையும் பாதிக்கும் என்­பதால் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளுக்கு ஆபத்து ஏற்­படும் என்­பதால் இது தொடர்பில் சிறு­பான்மைக் கட்­சி­களும் சிறு கட்­சி­களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக் குழுவுக்கு ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளார். அடுத்தமாதம் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது என்றார். விடி­வெள்ளி 

தேர்தல் முறை தொடர்பாக அன்மையில் சிகரம் வானொலியின் அரசியல் களம் நேரகாணல் நிகழ்வின் போதும் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கருத்து தெரிவித்தார் வீடியோ இங்கே... 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -