பிரதமர் தலைமையில் மலையகத்திற்கான ஐந்தாண்டு அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு..!

க.கிஷாந்தன்-
லைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 10.03.2016 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள் மற்றும் எனைய உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிலையத்தின் பங்களிப்புடன் இவ் அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. 

பத்தாண்டு திட்டத்தினை ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யுமாறு எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த ஆலோசனைக்கு அமைய இத்திட்டம் ஐந்தாண்டு திட்டமாக வரையறை செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்டு பிரதமர் முன்னிலையில் 10.03.2016 அன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -