மக்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தான் இதன் உண்மையான பயனை அடைய முடியும் - அமைச்சர் நஸீர்

அபு_அலா -

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு வினைத்திறனுடனான செயற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு சுமார் 06 கோடி ரூபாய்பெறுமதியில் வைத்திய உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கும் நடவடிக்கை கல்முனை சுகாதார சேவைகள்பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'அரசின் நிதி ஒதுக்கீட்டில் இங்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைக் கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளிப்பதன்மூலம் தான் இதன் உண்மையான பயனை அடைய முடியும். அரசின் வேலைத்திட்டங்களை சிறந்த முறையில்முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

அப்போது தான் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். சிறந்த நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு நாம்எல்லோரும் சுகதேகிகளாக வாழ வேண்டும். உணவுப்பழக்கவழக்கத்தினை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் எல்லோரும்சிறந்த சுகதேகிகளாக வாழலாம்.

இதனை மக்கள் முன்கொண்டு செல்வது துறைசார்ந்த அதிகாரிகளின் கையில் தங்கியுள்ளது. இது தொடர்பானவிழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தான் எமது சேவை சிறப்பாக அமையும். ஒரு நாடுஅபிவிருத்தி பாதையை நோக்கிச் செல்வதற்கு அங்கு சுகாதரத்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனைக்கருத்திற்கொண்டு அரசாங்கம் பல்வேறு சுகாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஒரு பிரதேசத்தின் சுகாதாரம் சிறந்த முறையுடனும் வினைத்திறனுடனும் அமைவதற்கு அப்பிரதேசவைத்தியசாலைகள் செயற்பட வேண்டும். எனவே, எமது நாட்டின் சுகாதாரத்துறையை கட்டியெழுப்புவதற்கு இங்குள்ளசுகாதார அதிகாரிகள் முன்வர வேண்டும்' என்றார். 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -