குச்சவெளியில் பாடசாலை மாணவனை தாக்கிய மூவர் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
குச்சவெளி பிரதேசத்தில் பாடசாலை சென்ற பதினான்கு வயதுடைய பள்ளி சிறுவன் ஒருவரை தாக்கிய மூவரை இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாசினி சித்திரவேல் திங்கட்கிழமை (7) உத்தரவிட்டார். 

குச்சவெளி, லயன்கிளப், நாகச்சோலை பகுதியைச் 41,29,மற்றும் 23வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் மூவரிடையேயும் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது அதில் மூவரும் ஒரு பாடசாலை மாணவனைத் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மூவரையும் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -