அம்பாறை - மாவடிப்பள்ளி கிராம ஆற்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான முஹம்மது இப்றாஹிம் பஸிதா என்ற 49 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் எனவும் இவர் ஒரு மன நோயாளி எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த சடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.