அம்பாறை: மாவடிப்பள்ளி கிராம ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு..!

ம்பாறை - மாவடிப்பள்ளி கிராம ஆற்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான முஹம்மது இப்றாஹிம் பஸிதா என்ற 49 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் எனவும் இவர் ஒரு மன நோயாளி எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -