நீதியை வேண்டும் சந்திப் - ஜனாதிபதி தலையிட வேண்டும்

சிங்கப்பூருக்கேனும் அழைத்துச் சென்று தமது நண்பரை குணப்படுத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட வேண்டும் என, அண்மையில், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் இளைஞரின் நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

"நீதியை வேண்டும் சந்திப்" என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

அண்மையில் இராஜகிரிய பகுதியில் வைத்து அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இதேவேளை, இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மொஹமட் சபாய் என்ற இளைஞர், விபத்து ஏற்பட்ட போது வாகனத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இருந்ததை தான் கண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -