நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு - விரைவில் கைதாகலாம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பணச் சலவை சட்டத்தின் கீழ் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். 

12.5 கோடி ரூபாவை பயன்படுத்தி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தை கொள்வனவு செய்தமை சம்பந்தமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நாமல் ராஜபக்சவை தவிர ஏனையோர் நாட்டில் இருந்து வெளியேற தடைவிதித்த நீதவான், நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மற்றும் 6 நிதி நிறுவனங்களில் உள்ள வைப்புகளை இடைநிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -