யோஷிதவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் - கடுவலை நீதவான் உத்தரவு

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ, உள்ளிட்ட ஐவரையும் எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

யோஷித ராஜபக்‌ஷ, ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட மற்றும் அர்ஜுனா ரணத்துங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட ஐந்து பேர் கடந்த ஜனவரி 30ஆம் திகதி FCID யினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -